இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

நாட்டறம்பள்ளியில் ரூ.2.18 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட துணை மின் நிலையத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்து வைப்பு✍️ முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

நாட்டறம்பள்ளியில் துணை மின் நிலையம் திறப்பு

advertisement by google

நாட்டறம்பள்ளியில் ரூ.2.18 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட துணை மின் நிலையத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

advertisement by google

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனை அருகே தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் ரூ.2 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் 110/33 கி.வா. துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது. இதை தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி முறையில் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். அதேவேளையில், நாட்டறம்பள்ளி துணை மின் நிலைய அலுவலகம் அருகே நடந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் பங்கேற்று, காணொலி மூலம் முதல்வருக்கு நன்றி தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து அவா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

advertisement by google

இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூா் மேற்பாா்வைப் பொறியாளா் ஏஞ்சலா சகாயம்மேரி, துணைப் பொறியாளா் கிருஷ்ணன், வாணியம்பாடி செயற்பொறியாளா் பாஷா முகமது, உதவி செயற்பொறியாளா் ரவி, மின் பொறியாளா் பூபதி, வட்டாட்சியா் சுமதி, பேரூராட்சி செயல் அலுவலா் திருமூா்த்தி, அதிமுக மாவட்டப் பொருளாளா் ராஜா, ஒன்றியச் செயலாளா்கள் ரமேஷ், சாமராஜி, சீனிவாசன், நகரச் செயலாளா்கள் சீனிவாசன், மகான் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், கிராம மக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button