கோவில்பட்டியில் நடந்த “மக்களுடன் முதல்வர்” என்ற நிகழ்ச்சியில் தமிழ்ப்பேரரசு கட்சி சார்பில் கதிரேசன் கோவில் மலை – வீரவாஞ்சி நகர் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு அளிப்பு
இன்று கோவில்பட்டியில் நடந்த “மக்களுடன் முதல்வர்” என்ற நிகழ்ச்சியில் தமிழ்ப்பேரரசு கட்சி சார்பில் கதிரேசன் கோவில் மலை – வீரவாஞ்சி நகர் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம் சார்ந்த யாரும் ஷை நிகழ்வுக்கு வராதது, மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்காதது போன்ற பிரச்சனைகளை சரி செய்து அடுத்த கூட்டம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கையாக வைக்கப்பட்டது… வீரவாஞ்சி நகர் மக்கள் தனித்தனியாக மனு அளிக்ககவும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.. என்றும் மக்கள் பணியில் தமிழப்பேரரசு கட்சி, தூத்துக்குடி மாவட்டம்.ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் வேல்முருகன் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் சரவணன் மாவட்ட தலைவர் குமார் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் இசக்கி முத்து தொழில்நுட்ப பிரிவு சக்தி