இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தூத்துக்குடி மாற்றுத்திறனாளிகள் ஆவின் நிறுவனத்தின் பால் விற்பனை நிலையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்✍️ முழு விவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google


மாற்றுத்திறனாளிகள் ஆவின் நிறுவனத்தின் பால் விற்பனை நிலையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்

advertisement by google

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் நிறுவனத்தின்
பால் உற்பத்தி பொருள் விற்பனை மையம் அமைக்க ரூ.50,000
மானியம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், தெரிவித்துள்ளார்.

advertisement by google

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

advertisement by google

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
வாயிலாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அவர்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும் பொருட்டு
மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் நிறுவனத்திற்கு பயனாளிகள் செலுத்த
வேண்டிய முன்பணத் தொகை உள்பட ஆவின் பொருட்களை
கொள்முதல் செய்வதற்கு பயனாளிகளுக்கு மானியமாக ரூ.50,000-
வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள்,மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ஆதார்
அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆவின் மையம் அமைக்க தேர்வு
செய்யப்பட்ட இடம் பற்றிய குறிப்பு ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

advertisement by google

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலக
தொலைபேசி எண்:
0461-2340626-ல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட
ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில்ராஜ்
தெரிவித்துள்ளார்

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button