இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

வீட்டின் பூட்டை உடைத்து35 பவுன் நகை திருட்டு – மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அதிரடியாக நேரில் ஆய்வு?விண்மீன்நியூஸ்

advertisement by google

வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை திருட்டு – மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேயன்விளையில் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை திருடு போனதையடுத்து சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும்
குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க திருச்செந்தூர் டி.எஸ்.பி பாரத் தலைமையில் தனிப்படை அமைத்து கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளார்

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேயன்விளை ஏ.ஐ.டி.யூ.சி காலணியில் சுதர்சன் செல்வபாபு என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் குவைத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுதர்சன் செல்வபாபு மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மேற்படி பேயன்விளையில் உள்ள அவர்களது வீட்டை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் (05.09.2020) மாலை காயல்பட்டினம் கோமன்புதூரில் உள்ள அவரது உறவினர் இறந்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.

advertisement by google

✍இதையடுத்து, நேற்று இரவு சுதர்சன் செல்வபாபு அவரது மனைவிக்கு போன் செய்து, பேயன்விளையில் உள்ள அவர்களது வீட்டில் உள்ள கேமரா ஆஃப் காட்டுகிறது, அதை என்னவென்று பார்க்கச் சொன்னதால், சுதர்சன் மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் இன்று (07.09.2020) காலை பேயன்விளையில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கேமராவை திருப்பி, கேமரா வயரை அறுத்து, வீட்டு பீரோவிலிருந்த 35 ¾ பவுன் நகையை திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது.

advertisement by google

✍இதுகுறித்து சுதர்சன் செல்வபாபு ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேயன்விளையில் உள்ள சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாரத் மேற்பார்வையில் ஆறுமுகநேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் செல்வி, உதவி ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button