t

தூத்துக்குடியில் புரோட்டா கடை உரிமையாளர் வெட்டிக் கொலை – மர்ம நபர்கள் வெறிச்செயல்

advertisement by google

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் புரோட்டா கடை உரிமையாளர் வெட்டிக் கொலை – மர்ம நபர்கள் வெறிச்செயல்

advertisement by google

advertisement by google

✍தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் மெயின் ரோட்டில் விசாகலட்சுமி புரோட்டா ஸ்டால் மற்றும் மட்டன் ஸ்டால் நடத்தி வருபவர் வேல்ராஜ் இவரது இளைய மகன் வாழ்வாங்கி வயது 27 இவர்கள் அ. சண்முகபுரத்தில் வசித்து வருகின்றனர். புரோட்டா கடையில் இரவு 11 மணி அளவில் புரோட்டா பொருட்களை எடுத்து வைத்து கடையை பூட்டி கொண்டிருந்தபோது திடீரென வந்த இரண்டு பேர் கொண்ட மர்ம நபர்கள் வாழ்வாங்கியை அரிவாளால் வெட்டி விட்டு ஓடியுள்ளனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாழ்வாங்கியை தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் கணேஷ் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button