இட ஒதுக்கீடு பறிக்கும் மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
இட ஒதுக்கீடு பறிக்கும் மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
✍இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கிய சமூக நீதிக் கொள்கைக்கு எதிராக இட ஒதுக்கீடு பறிக்கும் மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
✍இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழங்கிய சமூக நீதிக் கொள்கைக்கு எதிராக எஸ்சி எஸ்டி ஓபிசி இட ஒதுக்கீட்டை பறிக்கும் வகையில் நடைபெற்ற வங்கி அதிகாரிகளுக்கான தேர்வை ரத்து செய்ய வேண்டும் எஸ்சி எஸ்டி ஓபிசி மக்களின் இட ஒதுக்கீடு உரிமையை பறித்த மத்திய அரசை கண்டித்தும் தூத்துக்குடி மாவட்ட மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சமூக கொள்கை எதிராக இட ஒதுக்கீடுபறிக்கும் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில வர்த்தக அணி அமைப்பாளர் கார்மென், மாவட்ட வணிக அமைப்பாளர் சுலைமான், இஸ்லாமிய ஜனநாயக பேரவை அமைப்பாளர் காஜாமைதீன், காயல் நகர பொருளாளர் அகமது அல் அமீன், கார்த்திக், ராஜகோபால், அம்ஜத், அப்துல், முத்தலிப், முகமது, வேல் முருகன், உமாசங்கர் மற்றும் ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்.