கழுகுமலை சமையல் மாஸ்டர் வீட்டில் திருட்டு – போலீசார் விசாரணை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கழுகுமலை சமையல் மாஸ்டர் வீட்டில் திருட்டு – போலீசார் விசாரணை
கழுகுமலை செந்தூர் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சங்கர். சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது முன் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து மர்மநபர்கள், பூஜை அறையின் கதவை திறந்து, அங்கிருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்து ரூ.1.25 லட்சம் ரொக்கப்பணம், 3 பவுன் நகை ஆகியவற்றை திருடிச்சென்றனர்.காலையில் இதனை பார்த்த சங்கர் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கைரேகை நிபுணர் கார்த்திகா பரமேஸ்வரி, தலைமை காவலர் திருமுருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் கஸ்தூரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகிறார்.