வெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாளில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை – மாவட்ட எஸ்பி ஜெயக்குமார்அறிவிப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
வெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாளில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை – மாவட்ட எஸ்பி அறிவிப்பு
✍தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 26ம் தேதி நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையார் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார்
அறிவிப்பு விடுத்துள்ளார்.
✍தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்;கை நடவடிக்கையாக செப்டம்பர் மாதம் முழுவதும் 144 தடைஉத்தரவு அமலில் உள்ளதால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஊர்வலத்திற்கோ, ரத ஊர்வலத்திற்கோ மற்றும் எவ்வித ஊர்வலத்திற்கோ அனுமதி கிடையாது. மேலும் பால்குடம் எடுத்து செல்வதற்கோ, அன்னதானத்திற்கோ எவ்வித அனுமதியும் இல்லை. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,
போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் நடந்திட வேண்டும் எனவும், ஜாதி ரீதியாக சட்டை அணியவோ, பிற ஜாதியினரை புண்படும்படி வாசகங்களை பயன்படுத்தி கோஷம் எழுப்பக்கூடாது எனவும்,நீதிமன்ற உத்தரவு பிரகாரம் டிஜிட்டல் பேனர்கள் எதுவும் வைக்க அனுமதியில்லை எனவும், மேலும் வெங்கடேஷ் பண்ணையார் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் அவரது நினைவிடத்திற்கு செல்வதற்கு அனுமதி கிடையாது எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.