கோவில்பட்டி நகராட்சி பொறியாளர் மேசை முன்புறம் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கோவில்பட்டி நகராட்சி பொறியாளர் பிரிவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர்
கோவில்பட்டி 30வது வார்டு பகுதியில் 2வது பைப்லைன் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கான புதிய குடிநீர் இணைப்பு வழங்காமல் சாலை அமைக்கும்பணி தொடங்கப்படுவதை கண்டித்தும், குடிநீர் இணைப்புப் பணி நிறைவு பெறாத இடங்களுக்கு பணிகள் நிறைவடைந்ததாக தரச்சான்று கொடுக்கும் குடிநீர் வடிகால் வாரியத்தை கண்டித்தும், அப்பகுதி பெண்களுடன் நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் மருதம் மாரியப்பன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நிர்வாக பொறியாளர் பிரிவினை முற்றுகையிட்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்தவாரம் புதன்கிழமைக்குள் மேற்கண்ட பணிகள் நடைபெற நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி பொறியாளர் உறுதியளித்ததின் பேரிலும். மேலும் சம்பந்த பட்ட 30வது வார்டு பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டு அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இதில் நாம் தமிழர் கட்சி மாவட்ட வழக்குறைஞர் பாசறை செயலாளர் ரவிக்குமார், தெற்கு நகரச் செயலாளர் மகாராசன், நகர பொருளாளர்
ராஜசிம்மன், தொகுதி செயலாளர் ராஜேஷ் கண்ணா, தொகுதி துணைச் செயலாளர் செண்பகராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.