சீனாவுக்கு எதிராக ஓரணியில் திரளும் உலக நாடுகள்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
சீனாவுக்கு எதிராக ஓரணியில் திரளும் உலக நாடுகள்
சீனாவின் முறையற்ற செயலுக்காக, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள், ஓரணியில் திரள்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்தார்.
சீனா, அமெரிக்கா இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. தென் சீன கடல், லடாக் எல்லை பிரச்னையில், சீனாவின் அத்துமீறலை அமெரிக்கா தொடர்ந்து கண்டித்து வருகிறது. மேலும், சீனா மீது பொருளாதார தடை, விசா தடை என அமெரிக்கா தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ அளித்த பேட்டியில் கூறியதாவது:
சீன கம்யூனிஸ்ட் அரசின் நடவடிக்கைகள், நியாயமற்ற முறையில் உள்ளன. வெளிப்படையாக செயல்பட மறுக்கும் சீனா, இதர நாடுகளின் நலன்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. தென் சீன கடல்பகுதியில் சீனாவின் அத்துமீறல்களை தடுக்கும் நடவடிக்கைக்கு, பல நாடுகள் உதவி வருகின்றன.
சீனாவுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் ஒன்றிணைய துவங்கியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள், அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றி, சீனாவை எதிர்கொள்ள உள்ளன. அமெரிக்கா அளித்து வரும் அழுத்தத்தையும் சீனா உணர துவங்கி உள்ளது. விரைவில் சட்ட விதிமுறைகளை மதித்து சீனா செயல்படும் என நம்புகிறேதம். சீன ஜின்பின் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள, டிரம்ப் அரசு தயாராகி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.