கோவில்பட்டியில் ஓடை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்? முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கோவில்பட்டியில் ஓடை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி மெயின்ரோட்டில் மாதங்கோவில் தெரு விலக்கில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஜோதிபாசு தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் தெய்வேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும், கடைகளை இழக்கும் வியாபாரிகளுக்கு மாற்று இடத்தில் கடைகள் கட்டிக் கொடுக்க வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, கிருஷ்ணவேணி, ராமசுப்பு, மணி, நகரக்குழு உறுப்பினர் சக்திவேல்முருகன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.