t

பிரபல கள்ளச் சாராய வியாபாரி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட உதவி ஆய்வாளர்? உடனடி இடமாற்றம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கள்ளச் சாராய வியாபாரி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட உதவி ஆய்வாளர் இடமாற்றம்

advertisement by google

?♈?ஆம்பூர்: கள்ளச் சாராய வியாபாரி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட உதவி ஆய்வாளர் புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டார்.

advertisement by google

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உமர்ஆபாத் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மிட்டாளம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பவர் அஜித். இவருடைய தாய்மாமன் ஜானகிராமனும் கள்ளச்சாராய வியாபாரி ஆவார்.

advertisement by google

கடந்த சில மாதங்களுக்கு முன் கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார் அஜீத். அதேபோல் அவருடைய மாமா ஜானகிராமனும் கடந்த மாதம் கள்ளசாராய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்.

advertisement by google

இந்நிலையில் கடந்த 16.8.2020 அன்று கள்ளச்சாராய வியாபாரி அஜித் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

advertisement by google

அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் உமர்ஆபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் கலந்து கொண்டது இப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

advertisement by google

சமூக விரோதிகளுக்கு காவல்துறையினரே உடந்தையாக இருப்பதாக இப்பகுதி பொதுமக்கள் கருதுகின்றனர்.

advertisement by google

ஆயுதப்படைக்கு இடமாற்றம்: 16.08.2020 அன்று மிட்டாளம் ஊராட்சியில் சாராய வியாபாரி அஜீத் என்பவரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அவருக்கு சால்வை அணிவித்தும் கேக் ஊட்டியது குறித்து சர்ச்சை எழுந்தது.

இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பொ. விஜயகுமார், கள்ளச் சாராய வியாபாரியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட உதவி ஆய்வாளர் விஸ்வநாதனை ஆயுத படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button