பைக் மீது கார் மோதி சம்பவ இடத்திலே ஒருவர் பலி ? மோதிய கார் தீப்பற்றி எரிந்ததால் தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் பரபரப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
பைக் மீது கார் மோதி சம்பவம் இடத்தில் ஒருவர் பலி – மோதிய கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
✍தூத்துக்குடி – எட்டயபுரம் நான்கு வழி சாலையில் போல்டன்புரத்தைச் சேர்ந்த செல்லப்பா மகன் பாஸ்கரன் (வயது54) என்பவர் இன்று மாலை 7 மணியளவில் தனது மோட்டார் பைக்கில் தருவைகுளம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். கீழ அரசரடி சந்திப்பிலிருந்து பைக்கை திருப்பியபோது. மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த கார் படுவேகமாக பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அதிவேகத்தில் மோதிய கார் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் காரில் பயணம் செய்த தூத்துக்குடி சவேரியார்புரத்தைச் சேர்ந்த ஜோசப் அற்புதராஜ் மகன் டேவிட்மோசஸ் மற்றும் ஹக்கீம் மகன் முகம்மதுகிட்சர் ஆகிய இருவரும் உடனடியாக காரில் இருந்து இறங்கி உயிர் தப்பினர். காரில் வந்த டேவிட் மோசஸ் தூத்துக்குடியிலுள்ள மாருதி கார் ஷோரூமில் மேலாளராகவும் முகம்மது கிட்சர் ஊழியராகவும் வேலை பார்த்து வருவதாக தெரிகிறது. தகவலறிந்த தூத்துக்குடி தீயணைப்புதுறை விரைந்து சென்று தீயை அணைத்தது. மேலும் விபத்து குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
க்்் ச