செவிலியர் பிரிஸில்லா மரணத்தில் உள்ள மர்மம் என்ன?முழு விவரம் – விண்மீன் நியூஸ்
செவிலியர் பிரிஸில்லா மரணத்தில் உள்ள மர்மம் என்ன?
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியர் பிரிஸில்லா நேற்றிரவு உயிரிழந்தார். காவல்துறையில் இருந்து வந்த முதல்கட்ட தகவலில் அவர் கொரோனால் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது
இன்று காலை ”பிரிஸில்லாவுக்கு கொரோனா தொற்று இல்லை., அவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்” என மருத்துவமனை தலைவர் ஜெயந்தி தெரிவித்தார். மேலும் அவரது உடலை அஞ்சலிக்காக பொது வெளியிலும் வைத்தார். செவிலியர்கள் பலர் பிரிஸில்லாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்
பிரிஸில்லாவின் உடல் அஞ்சலியின்போது அங்குவந்த அவரது தம்பி ஆன்டுரூஸ், அவரது சகோதரியின் Case sheetஇல் கொரோனா பாசிடிவ் என்று எழுதப்பட்டிருந்த ஆவணங்களை காண்பித்தார். மேலும் அவருக்கு கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறினார்
ஆன்டுரூஸின் குற்றச்சாட்டு குறித்து மருத்துவமனை தலைவர் ஜெயந்தியிடம் கேட்டபோது, “Case sheetஇல் யாராவது தவறாக எழுதியிருக்கலாம். ரிப்போர்ட்டில் நெகட்டிவ்தான் வந்துள்ளது” என்றார். Corona Suspect wardஇல்தான் பிரிஸில்லா இருந்ததாகவும் கூறினார்
இப்படி காவல்துறை, மருத்துவமனை தலைவர், உறவினர் என மாற்றி மாற்றி வரும் தகவல்களால் இந்த விவகாரத்தில் குளறுபடி நீடிக்கிறது. செவிலியருக்கே இந்த நிலையா என்றால் மக்களின் நிலை என்ன?