t

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது பள்ளி மாணவி பாலியல் புகார்: போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது பள்ளி மாணவி பாலியல் புகார்: போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

advertisement by google

நாகர்கோவிலில் அதிமுக முன்னாள்சட்டமன்ற உறுப்பினர் மீது பள்ளி மாணவி அளித்த பாலியல் புகாரின் பேரின் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுசெய்யப்பட்டது.

advertisement by google

நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல்

advertisement by google

2016 ஆம் ஆண்டு வரை அதிமுக உறுப்பினராக இருந்தவர் நாஞ்சில் முருகேசன். அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தஇவர் மீது நாகர்கோவில் கோட்டாறு வாகையடி தெருவை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவி பாலியல் புகாரைத் தெரிவித்திருந்தார்.

advertisement by google

இதனையடுத்து குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள்மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவி கடந்த 2017 ஆம் ஆண்டு நாகர்கோவில் புத்தேரியில் முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக வாக்கு மூலம் அளித்தார்.

advertisement by google

இதேபோல் பறக்கை பகுதியைச் சேர்ந்த ஒருவரும்,கம்பளம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறினார். இதையடுத்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புகார் செய்தார். இதன்பேரில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட 4 பேர் மீதும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

advertisement by google

தலைமறைவாக உள்ள குற்றம்சாட்டப்பட்டவர்களைதேடி வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்ஆகியோர் நாஞ்சில் முருகேசனை அதிமுகவில் இருந்து நீக்கி திங்கள்கிழமை உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button