t

கோவில்பட்டி அருகே தனியார் தோட்டத்தில் இறந்த நிலையில் பெண் சடலம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி அருகே தனியார் தோட்டத்தில் இறந்த நிலையில் பெண் சடலம்

advertisement by google

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தனியார் தோட்டத்தில் இறந்த நிலையில் கிடந்த பெண் சடலத்தை போலீஸார் மீட்டனர்.

advertisement by google

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உள்பட்ட பிள்ளையார்நத்தம் விலக்கு அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் இறந்த நிலையில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.‌இதையடுத்து சம்பவ இடத்திற்கு மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஆர்தர்ஜஸ்டின் மற்றும் போலீஸார் சென்று சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் நடத்திய விசாரணையில் அவர் பிள்ளையார்நத்தம் தெற்கு தெருவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமமூர்த்தி மனைவி ஜானகி(32) என்பதும், தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் காலையில் வீட்டைவிட்டு சென்ற இவர், தனியார் தோட்டத்தில் விஷமருந்திய நிலையில் இறந்து கிடந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button