எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது யுவன்சங்கர்ராஜா பகீர் பேட்டி?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது : யுவன் பகீர்
இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்தின் தற்கொலையைத் தொடர்ந்து பலரும் தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் குறித்து மனம் திறந்து வருகின்றனர். அந்தவகையில் தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக இருக்கும் யுவன் சங்கர் ராஜாவும் தனது மன அழுத்தம் குறித்து சமூகவலைதளத்தில் பேசியுள்ளார்.
ரசிகர்களுடனான கலந்துரையாடலின் போது இந்த அதிர்ச்சித் தகவலை அவர் பகிர்ந்து கொண்டார். ரசிகர் ஒருவர், ‘அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய அச்சம் என்ன? நீங்கள் அதிலிருந்து மீண்டது எப்படி?” என்ற கேள்விக்கு பதிலளித்திருந்தார் யுவன். அதில், “இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் எனக்கு தற்கொலை எண்ணம் அதிகம் இருந்தது. அதையெல்லாம் கடக்க இஸ்லாம் தான் எனக்கு உதவியது” என யுவன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறிய யுவன், தனது பெயரை அப்துல் காலிக் என மாற்றிக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக 2015ஆம் ஆண்டு ஷாப்ரூன் நிஷா என்பவரை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார் யுவன்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யுவனின் மதமாற்றம் குறித்து சமூகவலைதளத்தில் சில சர்ச்சைப் பதிவுகள் வெளியாகின. அதற்குப் பதிலடி தரும் வகையில் யுவனின் மனைவி விளக்கமான பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். அந்தப் பதிவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் தான் யுவன் இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.