கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலை செயிண்ட் தாமஸ் மவுண்ட் கல்லறையில் நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI தன்னார்வலர்கள்?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலை செயிண்ட் தாமஸ் மவுண்ட் கல்லறையில் நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI தன்னார்வலர்கள்!
சென்னை ஆலந்தூரில் கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலை, குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI கட்சியின் தன்னார்வலர்கள் செயிண்ட் தாமஸ் மவுண்ட் கல்லறையில் கிருஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்தனர்.
முன்னதாக உயிரிழந்தவர் வசிக்கும் பகுதி கொரோனா கட்டுப்பாட்டு பகுதி என்பதால், உயிரிழந்தவரின் இறுதி சடங்கை மேற்கொள்வதற்கு குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், SDPI கட்சியின் தன்னார்வலர்களின் சேவையை அறிந்து, செங்கல்பட்டு மாவட்ட SDPI நிர்வாகிகளை தொடர்பு கொண்டதையடுத்து, அப்பகுதி சுகாதராத்துறை அதிகாரியை தொடர்புகொண்டு, தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளுடன், கிருஸ்தவ முறைப்படி உயிரிழந்தவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI தன்னார்வலர்களின் இந்த உதவிக்கு உயிரிழந்தவரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.