இ-பாஸ் இல்லாமல் எங்குங்கு போகலாம்?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
இ பாஸ் இல்லாமல் எங்குங்கு போகலாம்?
இன்று 31.05.2020 ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசு ஊரடங்கை சில தளர்வுகளுடன் ஜூன் 30ஆம் தேதி வரை நீடித்துள்ளது.
அதில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி
மண்டலம் 1-
கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்.
மண்டலம் 2-
தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி.
மண்டலம் 3-
விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி.
மண்டலம் 4-
நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை.
மண்டலம் 5-
திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்.
மண்டலம் 6-
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி.
மண்டலம் 7- காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு.
மண்டலம் 8-
சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதி.
உதாரணமாக கோவை,திருப்பூர்,ஈரோடு, நீலகிரி, சேலம் மற்றும் நாமக்கல் இவை அனைத்தும் சேர்ந்தது ஒரு மண்டலம்.
இந்த மண்டலத்திற்குள் சென்று வர E-Pass தேவையில்லை.
இந்த மாவட்டம் தவிர்த்து, உதாரணமாக சேலம் அருகாமை மாவட்டமான தர்மபுரி மாவட்டம் வேறு மண்டலத்தில் வருகிறது அங்கு செல்ல கட்டாயம் பாஸ் வேண்டும்.
மேலும் வெளி மாநிலங்கள் செல்ல கட்டாயம் E-Pass வேண்டும்.
பழைய நடைமுறை தான் பின்பற்றப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பேருந்துகளில் மண்டலங்களுக்குள் தான் பயணிக்க முடியும்.
மண்டலம் 7-இல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னைகாவல் எல்லைக்குள்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.
மண்டலம் 7, மண்டலம் 8-க்கு உட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது.
அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதிக்கப்படுகிறது.
பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 60 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
ரயில் போக்குவரத்து பழைய தடை நீடிக்கிறது.