சார்.. வேலை கொடு வேலை கொடுன்னு மக்கள் போராடுறாங்க…
அப்படியா…!
வேலை இல்லாத பிரச்சனை பெரும் பிரச்சனையா இருக்கு…!
யாரு பிரச்சனை பண்றது..?
படித்து விட்டு வேலை கிடைக்காமல் இருக்கிற பசங்க தான் சார்..
சரி விடுங்க… பிரச்சனைக்கு முடிவு கட்டிடலாம்..
ஆஹா… எல்லாருக்கும் வேலை கொடுக்கப் போறீங்களா..?
இல்லை… படிக்கிறத நிறுத்தப் போறேன்…
என்னாது… படிக்க வைக்கிறத நிறுத்தப் போறீங்களா.. எப்படி முடியும்.. யாரும் படிக்காதீங்கன்னு சொன்னா மக்கள் திட்ட மாட்டாங்களா..
ஹாஹா.. நான் என்ன முட்டாளா.. படிக்காதீங்கன்னு சொல்றதுக்கு…
வேற என்ன பண்ணுவீங்க…
வெரி சிம்பிள்… அஞ்சாவதுக்கும் எட்டாவதுக்கும் பொதுத்தேர்வு நடத்த சொல்லிட்டேன்… முடிந்தது ஜோலி…
தேர்வு நடத்த சொல்லிட்டா படிக்காம விட்டுடுவார்களா…?
அஞ்சாவது பரீட்சையிலேயே பாதி பேரை வீட்டுக்கு அனுப்பிடுவோம்.. எட்டாவது பரிட்சையில் மீதி பேரையும் அனுப்பிடுவோம்.. இவனுங்க முழுசும் படிச்சா தான் வேலை கேப்பானுங்க.. பாதியிலேயே அனுப்பிட்டா… எப்படி நம்ம திட்டம்..
அடடே அற்புதமா இருக்கு சார்… இதுக்கு ஏதாவது ஒரு பேர் வைக்கலாமே சார்…
தட் ஈஸ் கால்டு நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி…!
உய் உய்ய்.!