கல்வி
-
*என் உயிர் தமிழினமே* *17 – 9 – 2021 வெள்ளிக்கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை ;* *குறள் ; 759 ;* *செய்க பொருளைச் செறுநர் செறுக்கறுக்கும்* *எஃகதனின் கூறியது இல்* *விளக்க உரை ;* பொருளை நன்கு தேடிச் சேர்க்கவேண்டும் , ஏனெனில் பகைவர்களது தருக்கை யழிக்கவல்ல கூர்மையான ஆயுதம் அதனைப்போல வேறு யாதுமில்லை , *அதாவது செல்வத்தை* *கடல் கடந்தாவது* *தேடி சேர்க்க வேண்டும்* , *ஏனெனில்* *நல்லவர்களையும்* , *அவர்கள் செய்யும்* *நல்ல செயல்களையும்*, *அழிக்க நினைக்கும்* *தீய சக்திகளை அழிக்க* *வல்லமை படைத்த* *கூர்மையான ஆயுதம்*, *நல்லவர் தேடும் செல்வமே* , *தர்மத்தை அழிக்க* *நினைக்கும் தீய* *சக்திகளின் கை* *ஓங்கி இருப்பது* *போல தோற்றம்* *இருக்கும் , இறுதியில்* *தீயசக்தி அழிந்து* *தர்மமே வெல்லும்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 17 – 9 – 2021 வெள்ளிக்கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை ; குறள்…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *16 -9 – 2021* *வியாழக்கிழமை* *திருக்குறள்* *அதிகாரம் ; 9 ; விருந்தோம்பல்* *குறள் ; 82 ;* *விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா* *மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று* . *விளக்க உரை ;* சாவை நீக்கும் அமிழ்தமாக இருந்தாலுந் தன்னைக் கருதி வந்த விருந்தினர் , வீட்டுக்குப் புறத்தேயிருபபத் , தான் மட்டும் அதனை உண்ணுதல் விரும்பத் தக்கதன்று , *அதாவது உலகிலேயே* *பல்லாயிரம் ஆண்டுகளாக* *மாறாத தமிழர் கலாச்சாரம்* , *விருந்தினரை சிறப்பாக* *வரவேற்று சிறப்பாக* *உபசரித்தல்* , *இன்றும் எவ்வளவு* *வேலைப் பளு* *காரணமாக நாம்* *எங்கோ இருந்தாலும்* , *விருந்தினர் நமது* *வீட்டிற்கு வரும் போது*, *நாம் வீட்டில் இருந்து* *சிறப்பாக வரவேற்று* *சிறப்பாக உபசரித்து* *போற்றுவோம்* , *ஆகவே* *விருந்தினர் வெளியே* *இருக்கும் போது* , *தான் மட்டும்* *தனித்திருந்து உண்பது* *அமிர்தமே ஆனாலும்* *அது மிகப்பெரிய* *தவறான செயல்* , *அது தமிழர்* *பண்பாடு ஆகாது* . புரிந்து கொள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு*. *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 16 -9 – 2021 வியாழக்கிழமை திருக்குறள் அதிகாரம் ; 9 ; விருந்தோம்பல் குறள் ; 82 ; விருந்து புறத்ததாத்…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *15 – 9 – 2021 புதன்கிழமை* *திருக்குறள்* *அதிகாரம்* *25;அருளுடைமை;* *குறள்;246 ;* *பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி* *அல்லவை செய்தொழுகு வார்*. *விளக்க உரை ;* அருள் இல்லாதவராய் தீமைகள் செய்து வாழ்பவர் , வாழ்வின் அறத்தினின்று நீங்கி தம் வாழ்வின் குறிக்கோளையும் மறந்தவர் ஆவார் , அதாவது *மற்றவர்கள் கஷ்டங்களை* *பார்த்து தன்னால் இயன்ற உதவிகளை* *செய்து வருபவன்* *வாழ்வும்* *எதிர் காலத்தில் செழித்து வளரும்* , *ஆனால் ஒருவன்* *மற்றவர்கள் கஷ்டங்களை கண்டு* , *அதில் உதவி செய்வதைப்* *போல தீமைகள் செய்து* , *லாபம் அடைய நினைப்பவன் வாழ்வு நிலைகுலைந்து போகும்* , *அதாவது வாழ்வில்* *எந்த குறிக்கோளும்* , *இலட்சியம்* *இல்லாதவர்களே குற்றப்* *பின்னணியில்* *வாழ்பவர்கள்*. புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 15 – 9 – 2021 புதன்கிழமை திருக்குறள் அதிகாரம் 25;அருளுடைமை; குறள்;246 ; பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *14 – 9 – 2021 செவ்வாய்க் கிழமை* *திருக்குறள் ;* *அதிகாரம் ;88 ; பகைத்திறம் தெரிதல்* ; *குறள் ;878 ;* *வகையறிந்து தற்செய்து* *தற்காப்ப மாயும்* *பகைவர்கண் பட்ட செருக்கு* விளக்க உரை ; ஒருவன் தான் வெல்லும் வகையை அறிந்து தனக்கு வேண்டிய பொருளைத் தேடித் தன்னைக் காத்துக் கொள்வானாயின் , அவனது பகைவர்பால் உள்ள களிப்புக் கெடும் , *அதாவது ஒருவன்* *தனது குடும்பத்தை* *காப்பாற்ற* , *நீதி நேர்மையான* *வழியில் தனது* *திறமையாலும்* *விடாமுயற்சியாலும்* *வென்று பொருட்களை* *ஈட்டி தனது குடும்பத்தை* *காப்பாற்றுவான்* , *பிறகு இன்னல்கள் படும்* *எளியவர்களுக்கு உதவிக்* *கரம் நீட்டுவான்* , *அவனது வீழ்ச்சியை* *எதிர்பார்த்து காத்திருந்த பகைவரின்* *மகிழ்ச்சி ஒழிந்து போகும்*. புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 14 – 9 – 2021 செவ்வாய்க் கிழமை திருக்குறள் ; அதிகாரம் ;88 ; பகைத்திறம் தெரிதல் ; குறள் ;878…
Read More » - advertisement by google
-
நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடங்குகிறது✍️மாணவர்கள் யாரும் விபரீத முடிவெடுக்க வேண்டாம்✍️ முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
மாணவர்கள் யாரும் விபரீத முடிவெடுக்க வேண்டாம்; நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடங்குகிறது: முதல்வர் ஸ்டாலின் மாணவர் தனுஷ் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின்,…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *12 – 9 – 2021 ; ஞாயிற்றுக் கிழமை* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 29 ; தவம் ;* *குறள் ; 266 ;* *தவம்செய்வார் தம்கருமம் செய்வார் , மற் றல்லார்* *அவம்செய்வார் ஆசையுள் பட்டு* . *விளக்க உரை ;* தவஞ்செய்கின்றவர்களே தமக்கு உறுதி பயக்கும் நற்செய்கை செய்கின்றவராவர் , தவஞ் செய்யாதவர்கள் ஆசையாகிய வலையிற்பட்டு வீண்தொழில் செய்பவர்களே , *அதாவது தெய்வ பக்தி* *உள்ளவர்கள் எந்த ஒரு* *நல்ல செயலையும் உறுதியுடன்* *செய்து தன்னையும் , தன்னை* *சுற்றியுள்ளவர்களையும்* , *உயர்ந்த நிலைக்கு* *கொண்டு செல்வார்கள்* , *தவம் செய்யாத மற்றவர்கள்*, *தீயவழியில் சென்று* *தானும் கெட்டு , தன்னைச்* *சுற்றியுள்ளவர்களையும்* , *கெட்ட வழியில் நடத்துவார்கள்*. *நல்லசெயல்கள் செய்ய* *ஆரம்பத்தில் கஷ்டமாக* *இருக்கும்* , *பின்பு நல்லசெயல்களே* *மேன்மையான வெற்றி* *பெறும்*. புரிந்து கொள் *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 12 – 9 – 2021 ; ஞாயிற்றுக் கிழமை திருக்குறள் ; அதிகாரம் ; 29 ; தவம் ; குறள்…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *8 – 9 – 2021 புதன்கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 99 ; சான்றாண்மை ;* *குறள் ; 981;* *கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து* *சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு* *விளக்க உரை ;* தம் கடமைகள் இவை என்று அறிந்து குணநிறைவை மேற்கொள்ளுபவருக்கு , நல்ல முயற்சிகள் எல்லாம் கடமையாமென்று அறிஞர் சொல்லுவர் , *அதாவது தமது கடமை* *இதுவென்று அறிந்து* *நற்குணங்களை* *மேற்கொண்டு* *செயல்படும் நல்லவர்க்கு* *நல்ல குணங்கள் எல்லாம்* *இயல்பாய் இருக்கும்* , *நல்லது செய்பவனை* *தடுப்பவனுக்கு* *தற்காலிகமாக வெற்றி* *கிடைக்கலாம்* , *ஆனால் நல்லது* *செய்பவனுக்கு நிரந்தர* *வெற்றி கிடைக்கும்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 8 – 9 – 2021 புதன்கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 99 ; சான்றாண்மை ; குறள் ;…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *31 – 8 – 2021 செவ்வாய் கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 60 ; ஊக்கம் உடைமை ;* *குறள் ; 596 ;* *உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் , மற்றது* *தள்ளினும் தள்ளாமை நீர்த்து* . *விளக்க உரை* ; கருதுவது எல்லாம் உயர்வானதையே கருதுக , அஃது ஊழ்வலியால் எய்த முடியாமல் போனாலும் , உயர் நோக்கமானது இகழப்படாத தன்மை உடையது , எப்பொழுதும் உயர்வானவற்றையே நினைத்து முயற்சி செய்ய வேண்டும் , அவை கிடைக்காவிட்டாலும் அந்த எண்ணத்தைக் கைவிடக் கூடாது , அதாவது *விண்ணுக்கும்* , *மண்ணுக்கும்* *பாலம் கட்ட முடியும்* *என்று முதலில்* *உன்னை நீ* *நம்ப வேண்டும்* , *நம்பினால் கண்டிப்பாக* *உன்னால் இவ்வுலகில்* *உன்னால் நாலுபேருக்கு* *நன்மை செய்து* *சாதிக்க முடியும்* *உன் நோக்கம்* *உயர்வானதாக* *இருக்கட்டும்* *வருங்காலம் உனக்கு* *வசந்தகாலமாக இருக்கும்*. புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 31 – 8 – 2021 செவ்வாய் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 60 ; ஊக்கம் உடைமை ;…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *1 – 9 – 2021 புதன்கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 74 ; நாடு ;* *குறள் ; 736 ;* *கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா* *நாடென்ப நாட்டின் தலை* . *விளக்க உரை* ; பகைவராற் கெடுதி அடையாததாய் , அங்ஙனங் கெட்டாலுஞ் செழிப்பிற் குறையாததா யிருக்கிற நாடே எல்லா நாட்டினும் முதல்தரமானது , *அதாவது பகைவரால்* *நாட்டிற்கு கெடுதல்* *இல்லாததாகவும்* , *தன் நாட்டிற்கு வளம்* *குறையாததாகவும்* *உள்ள நமது நாடு* *மற்ற நாடுகளைவிட* *சிறந்த நாடாகும்* , *ஒவ்வொருவரும்* *தனது* *குடும்பத்தினரையும்* *காப்பாற்ற* *விடாமுயற்சியுடன்* *உழைத்து வளமாக* *வாழ்ந்து வந்தால்* , *நமது நாடு மற்ற* *நாடுகளை விடச்* *சிறந்த நாடாகும்* . புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 1 – 9 – 2021 புதன்கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 74 ; நாடு ; குறள் ;…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *13 – 8 – 2021 வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 33 ; கொல்லாமை ;* *குறள் ; 322 ;* *பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் லூலோர்* *தொகுத்தவற்றுள் எல்லாம் தலை* *விளக்க உரை ;* தான் உண்பதனைப் பசித்த உயிர்களுக்குப் பகுத்துக் கொடுத்துண்டு அவை பலவற்றையுங் காப்பாற்றுதல் அறநூலுடையார் தொகுத்துக் கூறிய அறங்கள் எல்லாவற்றிலும் முதன்மையான அறமாகும் , *அதாவது தான்* *உண்பதைப் பங்கிட்டுக்* *கொடுத்துத் தானும்* *உண்டு பல உயிர்களையும்* *பாதுகாத்தல்* , *கற்றோர் தொகுத்துக்* *கூறிய நன்மைகள்* *எல்லாவற்றிலும்* *சிறந்த நன்மையாகும்* , *சொர்க்கத்திலும்* *கிடைக்காத இன்பம்* , *எளியவர்களுக்கு* *செய்யும் உதவியால்* *அவர்களின்* *சந்தோஷத்தின்* *மூலம் வரும் இன்பமே* *உலகிலேயே சிறந்த இன்பம்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M .தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 13 – 8 – 2021 வெள்ளிக் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 33 ; கொல்லாமை ; குறள்…
Read More » - advertisement by google