t

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து அண்ணா பஸ் நிலையத்திற்கு 24 மணி நேரமும் அரசு லோகல் பஸ் இயக்க வேண்டியும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இரட்டை மாட்டு வண்டியில் சென்று ,தமிழ் மாநில கட்சியினர் , நகரதலைவர் ராஜகோபால் தலைமையில் நூதன போராட்டம்

advertisement by google

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து அண்ணா பஸ் நிலையத்திற்கு 24 மணி நேரமும் அரசு லோகல் பஸ் இயக்க வேண்டியும் மேலும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 10 மணி அளவில் த.மா.கா. நகர தலைவர் k. P. ராஜகோபால் தலைமையில் அக்கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இரட்டை மாட்டு வண்டியில் பயணிகளை கூடுதல் பஸ் நிலையத்திற்கு ஏற்றிச் செல்லும் போராட்டத்தில் ஈடுபட அண்ணா பஸ் நிலையம் நோக்கி வந்தனர்.

advertisement by google

இவர்களை AKSதியேட்டர் ரோடு சந்திப்பில் தடுத்து நிறுத்தி மாட்டுவண்டியில் வந்த தமிழ் மாநில கட்சியினரை மேற்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஹரி கண்ணன், செந்தில்குமார், அர்ஜூனன் மற்றும் போலீசார் கைது செய்தனர். இதனால் கோவில்பட்டி பஸ்நிலையம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button