ஏரியை சுத்தம் செய்வதில் திமுக – அதிமுகவினர் போட்டாபோட்டி.. 48 மணி நேரத்தில் சுத்தம் செய்யப்பட்ட புழுதிவாக்கம் ஏரி✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
ஏரியை சுத்தம் செய்வதில் திமுக – அதிமுகவினர் போட்டாபோட்டி.. 48 மணி நேரத்தில் சுத்தம் செய்யப்பட்ட புழுதிவாக்கம் ஏரி!
சென்னை புழுதிவாக்கத்தில் 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட சித்தேரி ஏரியை அதிமுக, திமுக மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சேர்ந்து 48 மணி நேரத்தில் சுத்தம் செய்தனர்.
ஆகாயத் தாமரைகளாலும், குப்பை கழிவுகளாலும் மாசடைந்த இந்த ஏரியை சுத்தம் செய்யப்போவதாக முதலில் திமுகவினர் அறிவித்தனர். இதை அறிந்த அப்பகுதியை சார்ந்த அதிமுகவினர் கடந்த வியாழக்கிழமை காலையிலேயே படகுகள், பணியாட்களுடன் ஏரிக்கரைக்கு வந்து சுத்தம் செய்யும் பணியை துவக்கினர். அதே நேரம் அங்கு திமுகவினரும் வந்ததால் யார் சுத்தம் செய்வது என்ற போட்டி எழுந்தது. இறுதியில் இரண்டு கட்சியினரும் சேர்ந்து அந்த பணியை நடத்துவது என்று முடிவானது.
இந்த தகவல் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிந்ததும், 20 பணியாளர்களையும், பாசி அகற்றும் இயந்திரங்கள் இரண்டையும் அனுப்பினர்.
திமுக, அதிமுகவினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்களின் உழைப்பின் பலனாக 2 நாளில் புழுதிவாக்கம் ஏரி புதுப் பொலிவை பெற்றது.