அமித்ஷா முன்னிலையில் மத்தியரசை விளாசிய பஜாஜ்நிறுவன உரிமையாளர்?
♦அமித்ஷா முன்னிலையில் மத்திய அரசை விளாசிய பஜாஜ் நிறுவன உரிமையாளர்!
?அரசை விமர்சிக்க பயமாக உள்ளது என்று பஜாஜ் நிறுவன உரிமையாளர் ராகுல் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
?எக்னாமிக் டைம்ஸ் நாளிதழ் ஒருங்கிணைத்த விருது வழங்கும் விழா நேற்று (சனிக்கிழமை) மும்பையில் நடந்தது.
?இந்த நிகழ்வில் அமைச்சர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
?இதில் கலந்து கொண்டு பேசிய ராகுல் பஜாஜ், ” இப்போதெல்லாம் அரசை விமர்சிப்பதற்கே மக்களுக்க அச்சமாக உள்ளது. இது என் நிறுவன ஊழியர்களுக்கும் சேர்த்துத்தான். எனினும் நான் விமர்சிப்பேன். ” என்றார்.
?மேலும் “நாட்டில் வளர்ச்சி இல்லை என்பதை மத்திய அரசு வேண்டுமானால் சொல்லாமல் மறைக்கலாம். ஆனால், ஐ.எம்.எஃப், உலக வங்கி உள்ளிட்டவை கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக இந்திய வளர்ச்சியில் வீழ்ச்சியிருப்பதை வெளிச்சமிட்டு காட்டுகின்றன.
?மத்திய அரசு வேண்டுமானால் மகிழ்ச்சியான முகத்தைக் காட்டலாம். ஆனால், உண்மை அப்படி இல்லை. அதனை மறைக்கவும் முடியாது” என்றார்.
?மேலும் நாட்டில் நிலவிவரும் கும்பல் கொலைகள் குறித்தும் பேசிய ராகுல் பஜாஜ், “கும்பல் கொலைகள் சகிப்பின்மை சூழலை உண்டாக்குகிறது. எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. கும்பல் கொலைகள் தொடர்பாக யாரும் தண்டிக்கப்படவில்லை” என்றார்.