1960களில் பொதுக்கூட்டத்தில் பெரியார் பேசியது?சாமி பெருசா ?நான் பெருசா?சிரிப்பு ஆராவரம்?
1960 களில் ஒரு பொது கூட்டத்தில் தந்தை பெரியார் பேசியது,
சாமி பெருசா, நான் பெருசா என்ற விவாதம்,
ஒரு தண்ணி இருக்குற குளத்துல என்னையும், ஒரு சாமி சிலையும் தூக்கி உள்ள போடுங்க, அதுல எது நீந்தி வருதோ, அதுக்கு தான் சக்தி அதிகம்னு ஒத்துக்கிடுவோம்.
இந்த உரையை கேட்டு அங்கிருந்தவர்கள் பெரியாரின் அறிவுத்திறனைக் கண்டு கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
அப்போ திடீரென கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து பெரியாரிடம் ஆவேசமாக “அப்போ ஒரு போட்டி வைச்சிகிடலாம், அந்த சாமி சிலையையும், பெரியாரையும் சாட்டையால 100 அடி அடிப்போம். யாரு கத்தாம இருக்காங்களோ, அவங்களுக்கு தான் சக்தி அதிகம்னு ஒத்துக்கிடுவோம்” என்று சொல்ல அங்கிருந்த மக்கள் சிரிக்க ஆரம்பிச்சாங்க. அப்போ பெரியார் கொஞ்சமும் யோசிக்காம. “உன் சாமி அடி வாங்கிட்டு சும்மா நிக்கும். நான் சாட்டையை புடுங்கி உன்னையும் அடிப்பேன், அந்த சாமி சிலையை வச்சி யாவாரம் பாத்துட்டு இருக்குற அந்த பாப்பானையும் அடிப்பேன். இப்ப சொல்லு யாருக்கு சக்தி அதிகம்”னு கேட்க, அங்கிருந்த மக்களின் சிரிப்பு சத்தமும், கரகோஷங்களும் விண்ணைபிளந்தது.