இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

உறவினர்களால் கைவிடப்பட்ட நபரின் உடலை அடக்கம் செய்த பாவூர்சத்திரம் காவல்துறையினர்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

உறவினர்களால் கைவிடப்பட்ட நபரின் உடலை அடக்கம் செய்த பாவூர்சத்திரம் காவல்துறையினர்

advertisement by google

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்பாவூர் பகுதியில் வசித்து வந்த சிவபெருமாள்(60) என்ற நபர் தனது இளமையில் தவறான நடத்தை மற்றும் பழக்கவழக்கங்கள் மூலம் தனது குடும்பத்தினராலும் சமுதாயத்தினராலும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.

advertisement by google

மேலும் இவர் மூன்று திருமணங்கள் செய்திருந்த நிலையிலும் இவரின் தவறான நடத்தை காரணமாக இவரின் மனைவிகள் இவருடன் சேர்ந்து வாழவில்லை.

advertisement by google

இந்நிலையில் கடந்த 15.10.2020 அன்று உடல்நிலை சரியில்லாமல் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் தானாக சென்று உள்நோயாளியாக சேர்ந்துள்ளார்.

advertisement by google

பின்னர் 19.10.2020 அன்று உடல்நிலை சரியில்லாமல் அவர் இறந்ததால் மருத்துவமனை நிர்வாகம் மூலம் பாவூர்சத்திரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் அவரின் உறவினர் மற்றும் சமுதாய தலைவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது அவர்கள் உடலை வாங்க மறுத்து விட்டனர்.

advertisement by google

இதனால் பாவூர்சத்திரத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு கிருஷ்ணன் அவர்கள் தனது சொந்தப் பணத்திலிருந்து இறுதிச் சடங்கிற்கு தேவையான ஏற்பாடுகளை தலைமை காவலர் திரு.ஜான்சன் மூலம் அவரின் உடலை மருத்துவமனையிலிருந்து பெற்று நேற்று 21.10.2020 தென்காசி மின்மயானத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.காவல்துறையினரின் இச்செயலை தெரிந்த நபர்கள் வெகுவாக பாராட்டினர்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button