கிரைம்

கோவில்பட்டி தம்பதி கொலைக்கு காரணம் என்ன?- போலீசார் தீவிர விசாரணை✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள பெருமாள் நகரை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 41) கட்டிட தொழிலாளி.இவரது மனைவி பரணிசெல்வி (39). இவர் லாயல்மில் காலனியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.இந்நிலையில் வீட்டின் உள்ளே ராஜபாண்டி, பரணிசெல்வி ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தம்பதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததால் அவர்களை யாரேனும் மர்ம நபர்கள் கொலை செய்தனரா? அப்படியென்றால் எதற்காக கொலை செய்யப்பட்டனர்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே ராஜபாண்டி கடந்த ஜூலை மாதம் பெருமாள் நகரில் புதியதாக வீடு கட்டி குடியேறியுள்ளார். வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.மேலும் அவர்கள் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்தது. போலீசார் அதனை உடைத்து தான் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.எனவே கடன் பிரச்சினை காரணமாக ராஜபாண்டி தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.இந்த கோணங்களில் போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளன

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button