சுதந்திர போராட்ட வீரரும் தமிழ் நவீன சிறுகதை தந்தை வ.வே.சு.ஐயர் பிறந்தநாள் (1881-1925) அவர்களை தமிழ்தமிழர் கட்சி போற்றுகிறது? விண்மீன்நியூஸ்
வ.வே .சு. ஐயர் பிறந்தநாள்
(1881 – 1925)
சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் நவீன சிறுகதையின் தந்தை எனவும் போற்றப்பட்ட வ.வே.சு. ஐயர் (வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர்) 1881ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள வரகனேரியில் பிறந்தார்.
இவர் 1907ஆம் ஆண்டு லண்டன் சென்ற போது சுதந்திரப் புரட்சி வீரர்களின் தொடர்பு மூலம், அவர்கள் ரகசியமாக நடத்தி வந்த அபிநவ பாரத் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார்.
இவர் பட்டமளிப்பு விழாவில் பிரிட்டிஷ் ராஜ விசுவாச பிரமாணம் எடுத்துக் கொண்டால் தான், பட்டம் வழங்கப்படும் என்பதால் அந்த உறுதிமொழியை எடுத்துக் கொள்ள மறுத்து விட்டார்.
இவர் ஸ்ரீ அரவிந்தர், மகாகவி பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி ஆகியோருடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். மேலும்
இவர் காந்தியால் கவரப்பட்டு அகிம்சாவாதியாக மாறினார்.
இவர் குளத்தங்கரை அரசமரம், மங்கையர்க்கரசியின் காதல், ‘KAMBA RAMAYANAM-a Study”, மாஜினியின் வாழ்க்கை வரலாறு, நெப்போலியனின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
தமிழ் நவீன சிறுகதையின் தந்தை என்று போற்றப்படுமிவர் தன்னுடைய 44வது (1925) வயதில் மறைந்தார்.
வவேசு ஐயர் குறித்து பாவேந்தர் எழுதிய புகழ் அஞ்சலிப்பா உங்கள் பார்வைக்கு :
கேட்டீரோ தமிழர்களே , நம்மில் மிக்க கீர்த்தி கொண்ட தமிழனுயிர் நீத்த சேதி
ஆட்பணிதல் கடவுள் ஒருவனுக்கே அன்றி
அத்தனை பேரும் சமமே ஆகும் என்னும்
மாட்சிமிகும் எண்ணத்தை நாட்டில் மீண்டும்
மலர்வித்த வீரர்க்குள் வீரன் கண்டீர் !
தாட்டிகஞ்சேர் சுப்பிரமணிய ஐயன் இந்தச்
சகம் நீத்தால் தமிழமனம் சகிப்பதுண்டோ?
பாவேந்தர்