இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

இதயக் கோளாறுக்கு பெருச்சாளியை சமைத்து சாப்பிட்ட பெண் சாவு?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

தருமபுரி: இதயக் கோளாறுக்கு பெருச்சாளியை சமைத்து சாப்பிட்ட பெண் சாவு

advertisement by google

தருமபுரி அக்.20-
தருமபுரி அருகே பெருச்சாளியை சமைத்து சாப்பிட்ட இளம் பெண் உயிரிழந்தார் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் விவசாயி இவரது மனைவி சரிகா இவர்களுக்கு 8 வயதில் மகள் உள்ளார் இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக இதய கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார் இதற்காக பல்வேறு சிகிச்சை பெற்று அவருக்குப் பதில் அளிக்கவில்லை இதையடுத்து நாட்டு வைத்தியம் பார்த்து வந்த அவரை ஒரு சிலர் பெருச்சாளி சாப்பிட்டு வந்தால் இதய கோளாறு குணமாகும் என கூறியுள்ளனர் இதனை நம்பிய சரிகா பெருச்சாளியை சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார் இந்நிலையில் கடந்த 17ம் தேதி வீட்டின் அருகே மயக்க நிலையில் பெருச்சாளி ஒன்று கிடந்தது அதனை பிடித்து சமைத்து சாப்பிட்டு உள்ளார் மாலை 6 மணியளவில் திடீரென அவர் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தொப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு உடல் நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் விஷம் தின்ற பெருச்சாளியை சமைத்து சாப்பிட்டதாக சரிதான் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button