சென்னையில் மது வாங்க பணம் தராத நண்பரின் பல் உடைப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
மது வாங்க பணம் தராத நண்பரின் பல் உடைப்பு
சென்னை புரசைவாக்கம் பெருமாள்பேட்டை முத்துநாயக்கன் தெருவை சேர்ந்தவர் நாகரத்தினம். இவர் வேலை முடிந்து வேப்பேரி அருணாச்சலம் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மது போதைக்கு அடிமையான அவரது நண்பரான கொசப்பேட்டை குடிசை பகுதி சச்சிதானந்தம் தெருவை சேர்ந்த கோபி வழிமறித்து, மதுபானம் வாங்குவதற்கு பணம் கேட்டார். நாகரத்தினம் பணம் தர மறுத்து கோபியை கண்டித்தார். இதனால் கோபமடைந்த கோபி, ஆபாசவார்த்தைகளால் நாகரத்தினத்தை திட்டினார். மேலும் அவரை கீழே தள்ளி அவரது பல்லையும் உடைத்தார்.
பின்னர் கோபி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். காயமடைந்த நாகரத்தினம், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.