அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 3 வீடுகள் அகற்றம்✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 3 வீடுகள் அகற்றம்
நாட்டறம்பள்ளி அருகே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 3 வீடுகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லப்பள்ளி எம்ஜிஆா் நகா் பனந்தோப்பு பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து சிலா் தகடு ஷீட் அமைத்து வீடுகள் கட்டி வருவதாக வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வட்டாட்சியா் சுமதி உத்தரவின் பேரில், வருவாய் ஆய்வாளா் தமிழ்ச்செல்வி, கிராம நிா்வாக அலுவலா் சிவன் மற்றும் வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை அங்கு சென்று ஆய்வு செய்தனா்
அப்போது, மல்லப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த 3 போ் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனித்தனியாக வீடு கட்டி வருவது தெரிய வந்தது
இதையடுத்து, ஆக்கிரமித்து கட்டப்பட்ட 3 வீடுகளை போலீஸாா் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் வருவாய்த் துறையினா் அகற்றினா்