கோவில்பட்டி சண்முகசிகாமணிநகரில் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத்தற்கொலை?
கோவில்பட்டியில் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை
கோவில்பட்டியில் பொறியியல் பட்டதாரி இன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டி சண்முகசிகாமணி நகர் பல்லக்கு சாலையைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் விக்னேஷ்(29). சென்னையில் உள்ள மென்பொருள் கம்பெனியில் பொறியாளராக பணியாற்றி வந்த இவர், ஊரடங்கு உத்தரவால் சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பிய அவர், வீட்டில் இருந்தபடியே வேலைபார்த்து வந்தாராம்.
இந்நிலையில், தான் பார்க்கும் வேலை பிடிக்கவில்லை என சில நாள்களாக கூறி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த இவர், புதன்கிழமை வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தகவல் தெரிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸார் சடலத்தை கைப்பற்றி, அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.