ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களைச் சுட்டால் 5100 ரூ பரிசு? சர்ச்சையைக்கிளப்பிய பாஜக எம்எல்ஏ?
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களைச் சுட்டால் ரூ.5,100 பரிசு – சர்ச்சையைக் கிளப்பிய பா.ஜ.க எம்.எல்.ஏ!
அவர்கள் தேச விரோதி போல நடத்தப்படவேண்டியவர்கள். அவர்கள் அரசின் உத்தரவைப் பின்பற்றவில்லையென்றால் அவர்கள் தீவிரவாதிகள்
ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றித் திரிபவர்களைச் சுட்டால் 5,100 ரூபாய் பரிசுத் தொகை என்று பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் வருபவர்களைக் காவல்துறையினர் தண்டித்துவருகின்றனர். அத்தியாவசியப் பொருள்களை வாங்கவருவோம், வேலைக்குச் செல்வோரும் காவல்துறையால் தண்டிக்கப்பட்ட நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெறுகின்றனர்
இந்தநிலையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ நந்த் கிஷோர் குர்ஜா வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர், ‘ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கால்களை முறிக்குமாறு நான் காவல்துறையைக் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் கேட்கவில்லையென்றால் அவர்களின் காலில் சுடுங்கள். அவர்களை, தேச விரோதி போல நடத்தப்படவேண்டியவர்கள். அவர்கள் அரசின் உத்தரவைப் பின்பற்றவில்லையென்றால் அவர்கள் தீவிரவாதிகள்
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களின் கால்களை உடைத்தாலோ, துப்பாகியால் சுட்டாலோ அவர்களுக்கு நான் 5,100 ரூபாய் பரிசளிப்பேன். மக்கள் மதகுருக்களின் பேச்சைக் கேட்கவில்லையென்றால் அவர்கள் காவல்துறையிடம் புகார் அளிக்கவேண்டும் என்று எச்சரிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது