கோவில்பட்டியில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு 14 சதவீதம் இடப்பங்கீட்டோடு தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவில் இருந்து நீக்க வலியுறுத்தும் விதமாக முதல்வர் இல்லத்தினை முற்றுக்கையிட இருசக்கர வாகனங்களில் புறப்பட்ட 33 பேர் கைது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
முதல்வர் இல்லத்தினை முற்றுக்கையிட இருசக்கர வாகனங்களில் புறப்பட்ட 33 பேர் கைது
தேவேந்திர குல வேளாளர்களுக்கு 14 சதவீதம் இடப்பங்கீட்டோடு தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவில் இருந்து நீக்க வலியுறுத்தும் விதமாக வரும் 19ந்தேதி தமிழக முதல்வர் இல்லத்தினை முற்றுக்கையிட மள்ளர் மீட்புக் களம் சார்பில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. 14ந்தேதி நேற்று தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் மும்புலிவெட்டியில் இருந்து இருசக்கர வாகனம் மூலமாக பேரணியாக சென்று முதல்வர் இல்லத்தை முற்றுகையிட முடிவு செய்து இருந்தனர்.இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக கழுகுமலை கெச்சிலாபுரத்தில் இருந்து மள்ளர் மீட்புக் களத்தின் தலைவர் கு.செந்தில்மள்ளர் தலைமையில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் முயன்றனர்.இதனை கோவில்பட்டி டி.எஸ்.பி.கலைக்கதிரவன் தலைமையிலான போலீசார் முதல்வர் இல்லத்தை முற்றுகையிட கிளம்பியவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.