மாம்பழ மோர் குழம்பு செய்முறை விளக்கம் மற்றும் தேவையான பொருள்கள்?
?️✳️மாம்பழ மோர் குழம்பு⛔️
மாம்பழ சீசன் என்பதால் பலரது வீட்டிலும் மாம்பழம் இருக்கலாம். அதை வைத்து இப்படி வித்யாசமான சுவையில் மோர் குழம்பு வைத்து பாருங்கள். வீட்டில் இருப்போரின் நாவுக்கு புது சுவையை அறிமுகப்படுத்துங்கள்.
?தேவையான பொருட்கள்?
இனிப்பான மாம்பழங்கள் – 2
புளித்த மோர் – 2 கப்
அரிசி – ஒரு டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று
காய்ந்த மிளகாய் – 2
தேங்காய் துருவல் – ஒரு கப்
தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
?செய்முறை?
? பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு மாம்பழங்களை வெட்டிப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக்கொள்ள வேண்டும்.
? அதன் பின்னர் புளித்த மோரை மிக்சியிலோ அல்லது கரண்டியிலோ நன்றாக கலக்கி எடுத்துக்கொள்ளவும்.
? தேங்காய் துருவல், அரிசி, சீரகம், ஒரு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் ஆகிவற்றையும் எடுத்து மையாக அரைத்து விழுதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
? பின்னர் அரைத்த விழுதை மோரில் கலந்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வேக வைத்த மாம்பழங்களுடன் கலக்க வேண்டும். தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் கொதிக்கவிட வேண்டும்.
? நன்றாக மோர் குழம்பு கொதித்த பின்னர், தாளிக்கும் கரண்டியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், ஒரு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து இறக்க வேண்டும்.
இப்போது ருசியான மாம்பழ மோர் குழம்பு ரெடி.