கோவில்பட்டி நகர பாஜக சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கள்?முழுவிபரம் – விண்மீன்நியூஸ்
கோவில்பட்டி நகர பாஜக சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கல்
கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் நகர பாஜக சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர பாஜக தலைவர் M.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கப சுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கபட்டது. நகர செயலாளர் அருணாசலம் மற்றும் V.ரமேஷ் ஆகியோர் நிகழ்ச்சிக்கு
ஏற்பாடு செய்து இருந்தனர்.சமூக இடைவெளியில் நின்று மக்கள் ஆர்வமுடன் கப சுர குடிநீரை அருந்தினர். ஊரடங்கு உத்தரவின் அவசியத்தையும், சமூக விலகல் குறித்தும், கொரானா வைரஸ் பரவுவது பற்றியும், அதனை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில்
மாவட்ட பொது செயலாளர் R.T.பாலாஜி, மாநில விவசாய அணி செயலாளர் ராமகிருஷ்ணன், சட்ட மன்ற பொறுப்பாளர் R.P. பாலு, மாவட்ட துணை தலைவர் உமா செல்வி, மாவட்ட செயலாளர் கோமதி, பாஜக நிர்வாகி வினோத்குமார், நகர பொதுச் செயலாளர் சீனிவாசன், நகர பொருளாளர் R.P.முருகன், ST அணி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன், வடக்கு ஒன்றிய அமைப்பாளர் லட்சுமணன், முன்னாள் நகர துணை தலைவர் நல்ல தம்பி, முன்னாள் நகர இளைஞரணி துணை தலைவர் குருதேவன், பாலமுருகன், விஜயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.