நெல்லை அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் புதியம்புத்தூரை சேர்ந்த, ரவுடி நீராவி முருகன் சுட்டுக்கொலை✍️திண்டுகல் தனிப்படை உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான குழு அதிரடி✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
நெல்லை அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி நீராவி முருகன் சுட்டுக்கொலை*
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி நீராவி முருகனை திண்டுக்கல் தனிப்படை போலீஸார் சுட்டு கொன்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரைச் சேர்ந்தவர் நீராவி முருகன்.
பழனியில் 40 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புயைட இவரை திண்டுக்கல் தனிப்படை போலீஸார் பல்வேறு மாவட்டங்களிலும் தேடி வந்தனர்.
இந்த நிலையில், உதவி ஆய்வாளர் இசக்கித்துரை தலைமையிலான குழு களக்காடு அருகே நீராவி முருகன் இருப்பதை அறிந்து அங்கே சென்றது. நீராவி முருகன் சொகுசுக் காரில் தப்பிக்க முயன்றபோது அவரை தனிப்படை சுற்றி வளைத்ததாகத் தெரிகிறது. அப்போது, நீராவி முருகன் போலீஸார் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது நடந்த மோதலில் ரவுடி நீராவி முருகன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது திருநெல்வேலியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.