தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர்

advertisement by google

இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: கோவில்பட்டியில் அரசியல் கட்சியினர் மாலை

advertisement by google

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியையடுத்த தெற்கு திட்டங்குளத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

advertisement by google

கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலர் பீக்கிலிபட்டி வீ.முருகேசன் தலைமையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில், இம்மானுவேல் சேகரனார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், நெசவாளரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

advertisement by google

தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பில் மாவட்டத் தலைவர் கனி தலைமையில் இம்மானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், மாவட்டப் பொதுசெயலர் பொன்ராஜ், மாவட்டச் செயலர் கணேசன், ஒன்றியத் தலைவர் (கிழக்கு) முருகராஜ், ஒன்றியப் பொதுசெயலர் முத்துகிருஷ்ணன், ஒன்றியச் செயலர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

advertisement by google

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் கதிரேசன் தலைமையில் இம்மானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், வழக்குரைஞரணி மாநிலத் துணைச் செயலர் பெஞ்சமின் பிராங்கிளின், நகரச் செயலர் கருப்பசாமிபாண்டியன், தொகுதி செயலர் முருகன், மாவட்ட மகளிரணிச் செயலர் விஜயா அந்தோணி, ஒன்றியச் செயலர்கள் காளிராஜ் (கயத்தாறு), மாதவன் (விளாத்திகுளம்), பெரியசாமி (புதூர்), கழுகுமலை நகரச் செயலர் ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

advertisement by google

டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் மார்ட்டீன் தலைமையில், இம்மானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், திமுக வழக்குரைஞரணி செயலர் ராமசந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் பிரபாவளவன், மூப்பன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாரீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

advertisement by google

நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒன்றியப் பொறுப்பாளர் வேல்முருகன் தலைமையில், நகர இளைஞர் பாசறை பொறுப்பாளர் நாகேந்திர தேசாய் இம்மானுவேல் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், தொகுதி செயலர் ராஜேஷ்கண்ணா, சுற்றுச்சூழல் பாசறை செயலர் பாலசுப்பிரமணியன், தொகுதி பொறுப்பாளர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

advertisement by google

மாவீரன் சி.பசுபதிபாண்டியர் இளைஞர் பேரவை மற்றும் பெருமாள்பாண்டியர் பாசறை சார்பில் இம்மானுவேல் சேகரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, டிரம் டிரஸ்டில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கு பாசறை சார்பில் அன்னதானம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

advertisement by google

Related Articles

Back to top button