நோயாளிகளுக்கு கால்கள் ஏன் கருத்து போகின்றன?கேள்விக்கு பதில்?
நோயாளிகளுக்கு கால்கள் ஏன் கருத்து போகின்றன?
ஒருவர் நோய்வாய் படுகிறார் என்றால் அவரின் உடல் பலகீனமாக இருக்கின்றது என்று அர்த்தம். உடல் பலகீனமாக இருப்பதினால் நோயாளிகள் உண்ணும் உணவுகளில் இருக்கும் கழிவுகள் மற்றும் இரசாயனங்கள் உடலால் முழுமையாக சுத்திகரித்து வெளியேற்ற முடியாமல் இரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்.
அதுமட்டுமின்றி இனிப்பு நீர், இரத்த கொதிப்பு, இருதய கோளாறுகள், மூட்டு வலி, போன்ற நோய்களுக்காக தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்களின் மருந்துகளில் இருக்கும் கழிவுகளும், இரசாயனங்களும் அவர்களின் இரத்தத்தில் கலந்துவிடும்.
இரத்தத்தில் கலந்துவிட்ட இரசாயனங்களும், கழிவுகளும், பூமியின் புவி ஈர்ப்பு விசையின் காரணமாக இரத்த ஓட்டத்தின் மூலமாக கால்களுக்கு இறங்கி, மீண்டும் உடலின் மேற்பகுதிக்கு செல்ல முடியாமல் காலங்களிலேயே தேங்குகின்றன. இதனால்தான் அவர்களின் கால்களும், தசைகளும், சதைகளும், கருத்து போகின்றன.