தேனி நட்டாத்தி இந்துநாடார் உறவின்முறை சார்பில் கொரானா நிவாரணநிதியாக குடும்பத்திற்கு 3000ரூபாய் வழங்கள்?
தேனி நட்டாத்தி இந்து நாடார்கள் உறவின்முறை சார்பில்,
சங்கத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 3,000 ரூபாய் கொரோனா நிவாரணத் தொகையாக சங்கத்தின் சேமிப்பு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.
சங்கம் என்பது ஆபத்துக்காலத்தில் உறுப்பினர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாக இருந்து வரும் தேனி நட்டாத்தி நாடார் உறவின்முறையின் பொதுச்செயலாளர் அண்ணாச்சி கமலக்கண்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
இதன்மூலம் தேனியில் வசிக்கும் நட்டாத்தி நாடார் உறவின்முறையைச் சேர்ந்த 900 குடும்பங்கள் பயன்பெறும்…இதன் மதிப்பு தோராயமாக 27 லட்சம் அளவில் இருக்கும் என்று நினைக்கிறேன்.
மிகவும் பெருமைபடக்கூடிய விஷயம்.. சங்க உறுப்பினர்களால் உருவான சங்கம் அதன் மூலம் உருவான தேனி நட்டாத்தி நாடார் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை மற்றும் நர்சரி கல்லூரி அதிலிருந்து கிடைக்கும் சேமிப்பை சங்க உறுப்பினர்களுக்கு வழங்குவது மிகவும் சிறப்பான செயல்பாடு.
தமிழகத்தில் உள்ள அனைத்து சங்கங்களும் இதுபோன்று இக்கட்டான காலங்களில் சங்க உறுப்பினர்களின் தேவையை பூர்த்தி செய்ய முன்வர வேண்டும்.
தேனி நட்டாத்தி இந்து நாடார் உறவின் முறைக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
P.M.P.துரை
ஆதம்பாக்கம்
?????????