உலகின் முதன்முறையாக ஆண் கருத்தடை ஊசி இந்தியாவில் கண்டுபிடிப்பு?
உலகின் முதன்முறையாக ஆண் கருத்தடை ஊசி இந்தியாவில் கண்டுபிடிப்பு.
உலகிலேயே முதன்முறையாக, ஆண்களுக்கான கருத்தடை ஊசியை உருவாக்கி, வெற்றிகரமாக சோதித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சாதனை படைத்திருக்கிறது.
13 ஆண்டுகள் பலன் தரும் இந்த ஆண்களுக்கான கருத்தடை ஊசி, இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.
மூன்று கட்டங்களாக, 303 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், 97.3 விழுக்காடு அளவிற்கு, வெற்றிக்கரமான முடிவு கிடைத்திருப்பதோடு, இந்த ஆண் கருத்தடை ஊசியால் எந்த பக்க விளைவும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக, இதனை கண்டறிந்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பு தெரிவித்திருக்கிறது.
ஆண்களுக்கான கருத்தடை ஊசி குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்காவும் ஈடுபட்டிருந்தாலும், அது ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது. இதேபோன்றதொரு, ஆண் கருத்தடை ஊசியை பிரிட்டனும் உருவாக்கியபோது, கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் அத்திட்டத்தை, அந்நாடு நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.