இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

உதயநிதி ரசிகர் மன்ற பொறுப்பாளர் சந்துரு தலையை வெட்டி ஸ்டேஷனுக்கு கொண்டு சென்ற3பேர்?திருச்சி ஸ்ரீரங்கத்தில் பழிக்கு பழி சம்பவம்?

advertisement by google

பழிக்கு பழி.. உதயநிதி ரசிகர் மன்ற பொறுப்பாளர் தலையை வெட்டி.. ஸ்டேஷனுக்கு கொண்டு சென்ற 3 பேர்.

advertisement by google

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரவுடி சந்திரமோகனை மிக கொடூரமாக கொலை செய்த 3 பேரும் போலீசில் சரண் அடைந்துள்ளனர்… அத்துடன் கையில் சந்துருவின் தலையையும் கொண்டு சென்று, ஏன் சந்துரு தலையை வெட்டினோம் என்று பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளனர்.

advertisement by google

ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சந்திரமோகன்.. உதயநிதி ரசிகர் மன்றத்தில் பொறுப்பாளராக இருந்தவர்.. இவர் மீது ஏகப்பட்ட கொலை, திருட்டு, வழிப்பறி என 33-க்கும் மேற்பட்ட கேஸ்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன்பு இவர் ஒரு பால்காரர் ஒருவரின் தலையை துண்டித்து எடுத்து கொன்றுவிட்டதால், இவருக்கு தலைவெட்டி சந்திரமோகன் என்ற ஒரு பெயரும் உண்டு.. நிறைய முன்விரோதங்களும் சந்துருவுக்கு ஏற்பட்டுள்ளது.

advertisement by google

இந்நிலையில், தேவிபாலா தியேட்டரில் இருந்து ரயில்வே மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது 3 பேர் ஒரு யுனோவா காரில் வந்து சந்துருவை வழிமறித்தனர்.. கைகளில் அரிவாள், கத்தி உட்பட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தனர்… அவர்களை கண்டதும் சந்துரு தப்பியோட முயன்றார்..
ஆனாலும் 3 பேரும் விரட்டி பிடித்து.. வழிமறித்து.. சந்துருவை அங்கேயே சரமாரியாக வெட்டி கொன்றனர்.. அவரது தலையையும் துண்டித்து கையில் எடுத்து கொண்டு ஸ்ரீரங்கம் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்தனர். சுரேஷ், சரவணவன், செல்வகுமார் ஆகியோர்தான் கொலை செய்த 3 பேரும் என தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்..

advertisement by google

முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளதாக முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. பட்டப்பகலில் உதயநிதி ரசிகர் மன்ற பொறுப்பாளரை கொன்று தலையை துண்டித்த சம்பவம் திருச்சியை உறைய வைத்து வருகிறது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button