?கக்கன் அவர்களை பற்றி நண்பர் வேணுகோபால் கூறியது நடந்த சம்பவம்?
நடந்த ஒரு சம்பவம்
“1968-ல நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராசர் போட்டியிட்டார். தேர்தல் பொறுப்பாளர் கக்கன். தேர்தல் முடிந்து நானும் அவரும் ஊர் திரும்பினோம். தேர்தலுக்குக் கொடுத்த பணத்தை கணக்கு பார்த்தபோது நானூறு ரூபாய் குறைஞ்சது. கக்கனுக்கு தாங்கமுடியாத வருத்தம். நான் என்னவெல்லாமோ சமாதானம் சொன்னேன். கேக்கல்ல. என்னை அனுப்பி அவரது மனைவி கையில் கிடந்த இரண்டு வளையல்களை வாங்கி வித்துட்டு வரச்சொன்னார். நானும் வித்துட்டு வந்தேன். அப்போதும் நானூறு ரூபாய் தேறல்ல. வேறும் சில பொருட்களை விற்று நானூறு ரூபாய் தேத்திட்டாரு. பின்னர் சென்னைக்குப் போய் கட்சி பொருளாளரிடம் கணக்கை ஒப்படைத்தோம். “கணக்கை ஒப்படைச்சிட்டேன்” என இவர் காமராசரிடம் போய் சொல்ல அவருக்கு கடுமையான கோபம் வந்தது. “யாரு உன்கிட்ட கணக்கு கேட்டா..” என சத்தம் போட்டாரு. “அது நானே முறை” என்றார் கக்கன். “நீங்க படற கஷ்டம் எனக்குத் தெரியும் அது தான் தேர்தல் பொறுப்பை உங்கிட்ட ஒப்படைச்சேன்”ன்னாரு. அப்போது கூட மனைவி நகைகளை விற்று கணக்கை சரி செய்ததை கக்கன் சொல்லல்ல.. அது தாங்க கக்கன்”
சில ஆண்டுகளுக்கு முன்னர் இதைச் சொன்னவர் கக்கனின் நண்பரான வேணுகோபால் என்பவர்.✍??