கிரைம்
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல் : மூன்று பேர் கைது
advertisement by google
திருச்சி: ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
advertisement by google
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்களுக்கும் கோவில் தற்காலிக பணியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
advertisement by google
தற்காலிக பணியாளர்கள் தாக்கியதில், ஐயப்ப பக்தர்கள் சிலருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
advertisement by google
இது தொடர்பாக ஆந்திர மாநில பக்தர்கள் கொடுத்த புகார் படி ஸ்ரீரங்கம் போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, தற்காலிக பணியாளர்களான பரத், செல்வா, விக்னேஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google