இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ஈரோடு மாவட்டத்தில்10சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை? இரண்டுபேர் போக்சோ சட்டத்தில் கைது?

advertisement by google

advertisement by google

ஈரோடு மாவட்டத்தில் 5 ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை, மதுபோதைக்கு அடிமையான தந்தை உதவியுடன், இரு நபர்கள் பல நாட்களாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

advertisement by google

இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார் சிறுமியின் தந்தை உட்பட இருவரை தேடி வருகின்றனர்

advertisement by google

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கூகலூர் குளத்துக்கடை என்ற ஊரைச்சேர்ந்த கூலித்தொழிலாளி குமார். இவர் மனைவியைப் பிரிந்து 10 வயது மகள் மற்றும் 5 வயது மகனுடன் வசித்து வருகிறார்.

advertisement by google

குமார் மதுபோதைக்கு அடிமையானவர் என்பதால், இரு குழந்தைகளும் , தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சிறப்பு பள்ளியில் சேர்ந்து படித்தனர்.

advertisement by google

அங்கு 5 ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டதால், பக்கத்து வீட்டு பெண்கள் உள்ளூர் மருத்துவமனை அழைத்துச்சென்று மருந்து மாத்திரை வாங்கி கொடுத்துள்ளனர்.

advertisement by google

பின்னர் வீடு திரும்பும் போது பெண்களிடம் தனக்கு நேர்ந்த அதிர்ச்சியூட்டும் பாலியல் கொடுமையை சொல்லி சிறுமி அழுதார்.

advertisement by google

அதே பகுதியை சேர்ந்த அருணாசலம், மயில்சாமி ஆகிய இருவர் பெயரைக்கூறிய சிறுமி, அவர்கள் தனது தந்தைக்கு மது வாங்கி கொடுத்தும், தனக்கு உணவு தருவதாக வீட்டுக்கு அழைத்துச்சென்றும், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறியுள்ளார்.

மேலும் குடிகார தந்தையும் தன்னிடம் அத்துமீறியதாகவும் கூறிஉள்ளார்

இதையடுத்து கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்து, பரிசோதித்ததில், பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்

இதையடுத்து தந்தை குமார், அருணாசலம், மயில்சாமி ஆகிய மூவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் அருணாசலத்தை கைது செய்தனர். மற்ற இருவரையும் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்நிலையில் மூவரையும் கடுமையாக தண்டிக்கவேண்டும் என்று பெண்கள் வலியுறுத்தி உள்ளனர்

மேலும் மயில்சாமியின் வீட்டுக்குள் புகுந்து, பொருட்களை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இருவரையும் தனிப்படை அமைத்து தேடிவருவதாக போலீசார் தெரிவித்ததால் மக்கள் கலைந்து சென்றனர்.

advertisement by google

Related Articles

Back to top button