தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் வாங்கிட கடனை திருப்பி தராததால் தாக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனிற்றி உயிரிழப்பு?

advertisement by google

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வாங்கியக் கடனை திருப்பித் தராததால், தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

advertisement by google

ஏரல் அடுத்த சிறுதொண்டநல்லூர் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர், ஆழ்வார்திருநகரி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் 1 லட்ச ரூபாய் கடன் பெற்று திருப்பி தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் கடந்த 14ம் தேதி சாகுல் ஹமீதை கடத்தி சென்ற கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள், பணத்தை கேட்டு சரமாரியாக தாக்கிவிட்டு 2 நாள் கழித்து வீட்டருகில் விட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து பலத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாகுல் ஹமீது, சிகிச்சை பலனின்றி வியாழனன்று உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஏரல் போலீசார் சோமசுந்தரம் என்பவனை கைது செய்து, கண்ணன் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button