குறைவு என்பதே இல்லை. எல்லாம் நிறைவே
எனக்குத் தெரிந்தவர் ஒருவர்.
எல்லோரையும் தன்னோடு compare
செய்து கொண்டே வாழ்க்கையைத்
தொலைத்து கொண்டிருப்பவர்.
தன்னை விட வசதி குறைவாக
இருப்பவர்களைப் பார்த்தால்
ஆணவத்தோடு எள்ளி நகையாடுவார்.
தன்னை விட வசதியானவர்களைப் பார்த்தால் பொறாமையைால் புழுங்கிச் சாவார்.
இது போன்ற புண்ணிய ஆத்மாக்கள் நம்மிடையே பலர் உண்டு.
இந்த எண்ணம் வாழ்க்கையையே திசை
திருப்பி விடும்.
அருட்தந்தையின் ஒரு சிந்தனை விளக்கம். மனதிலே ஒரு முடிச்சுப் போட்டுக் கொண்டால் மீண்டு வந்து விடலாம்.
நான் பிறந்தேன். நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு
முடியப் போகிறேன்.
இதற்கு மத்தியில் எவ்வளவு தான் இருந்தபோதிலும் கூட, சீரணிக்கக் கூடிய அளவிற்கு மேல் சாப்பிடப்போவதில்லை.
உடல் தாங்குகிற அளவுக்கு மேல் துணியைப் போடுவதில்லை.
நின்றால் கால் அளவு. படுத்தால் உடலளவு. இதற்கு மேல் பூமியை அனுபவிக்கக் கூடியவர்களும் இல்லை
வரும் போது கொண்டு வருவதில்லை. போகும் போது கொண்டு போகப்போவதும் இல்லை.
இந்த உண்மையை அப்படியே மனதிலே
ஏற்றுக் கொள்ளுங்கள்.
அப்போது நமக்கு எந்தெந்த இடத்தில் என்னென்ன கிடைக்கிறதோ, அது நிறைவாகத் தான் இருக்கும்.
வாழ்க்கையை ஒட்டி பார்த்தீர்களேயானால், எல்லோருக்கும் நிறைவாகத் தான் இருக்கிறது.
இப்படியே உலகம் முழுவதும் பார்த்தோமேயானால் எந்த இடத்திலும் யாருக்கும் குறைவே கிடையாது.
குறைவு என்பதே இல்லை. எல்லாம் நிறைவே. எல்லாம் நன்மையே.
வாழ்வினிது
சிந்தித்துச் செயலாற்றுங்கள்