தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்

மாருதி சுஸுகி திடீர் பேட்டரி இரு சக்கரவாகணபுரட்சி -பிரபல நிறுவனங்கள் அதிர்ச்சி

advertisement by google

பிரபல நிறுவனங்கள் வயிற்றில் அதிர்ச்சியை உண்டாக்கிய மாருதி சுஸுகி- காரணம் இதுதான்..!

advertisement by google

போட்டிக்கு நானும் ரெடி; சுஸுகி-மாருதி சுஸுகி கூட்டணி

advertisement by google

நாட்டில் உருவாகி வரும் மின்சார வாகன பயன்பாட்டுக்கான கட்டமைப்பு முறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியாவுக்கு ஏற்ற எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது சுஸுகி நிறுவனம்.
தற்போது இதற்கான ஆய்வுகளை அந்நிறுவனம் துரித கதியில் முடுக்கிவிட்டுள்ளது. வரும் 2020ம் ஆண்டில் இந்த ஸ்கூட்டர் புரோட்டோடைப் மாடலாக அறிமுகம் செய்யப்படுகிறது. பிறகு நாட்டின் சாலைகளில் அது சோதனைக்கு உட்படுத்தப்படும்.

advertisement by google

அப்போது கிடைக்கும் முடிவுகளை வைத்து மின்சார ஸ்கூட்டரின் கட்டமைப்பு, செயல்திறனை சுஸுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக மாருதி சுஸுகி கார் தயாரிப்பு நிறுவனத்தை ஒத்துழைப்பை நாடியுள்ளது சுஸுகி.

advertisement by google

சுஸுகிக்கு கீழ் செயல்பட்டு வரும் இருசக்கர வாகன தயாரிப்பு பிரிவான ‘சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ்’ நிறுவனம் தான் இந்த மின் ஸ்கூட்டருக்கான உற்பத்தி பணிகளை மேற்கொள்ளவுள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை பெரிதாக ஈர்த்துள்ளது.

advertisement by google

ரூ. 60 ஆயிரத்திற்குள் ஒரு மின்சார ஸ்கூட்டர்- இன்பதிர்ச்சி தரும் ஒகினவா

advertisement by google

இதுதொடர்பாக பேசிய சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் சத்தோஷி உஷிடா, மாருதி சுஸுகியின் மின்சார வாகன பயன்பாட்டை எங்களால் பயன்படுத்த முடியும். மேலும், மாருதி சுஸுகி மின்சார கார்களுக்காக அமைக்கும் சார்ஜிங் ஸ்டேஷனையும் எங்களால் பயன்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

advertisement by google

மேலும், மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு வழங்கப்படும் உதிரிபாகங்களை தங்களுக்கும் பெற்றி சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் அந்நிறுவனம் தயாரிக்கும் மின்சார வாகனங்கள் மிகவும் குறைந்த விலைக்கு நாட்டில் விற்பனைக்கு கொண்டு வந்திட இயலும்.

இந்தியாவின் முதல் பிஎஸ்-6 பைக் Hero Splendor iSmart BS-VI விற்பனைக்கு அறிமுகம்..!

ஆனால் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டு வரும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கட்டமைப்பு உடனடியாக வெற்றி அடைந்துவிடாது என்பதை சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் உணர்ந்துள்ளது.

தற்போது உருவாகி வரும் போட்டியை சாமாளிக்க மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டிய சூழலை சந்தித்துள்ளது சுஸுகி. இதனால் முதல் இரண்டு வாகனங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாது என்று சுஸுகி கூறுகிறது.

ஆனால் நடைமுறை சிக்கல்களை கடந்து அந்த வாகனங்களின் புதிய தலைமுறை மாடல்கள் குறிப்பிட்ட வரவேற்பை பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் நிச்சயம் எதிர்காலத்தில் உருவாகும் என சுஸுகி நம்பிக்கை தெரிவிக்கிறது.

சுஸுகியின் இந்த திட்டத்தை முடிவு செய்ததற்கு முழு முதற் காரணம் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான். வரும் ஜனவரி மாதம் விற்பனைக்குவ் வரவுள்ள இந்த ஸ்கூட்டர், வாடிக்கையாளர்களிடம் மின்சார வாகனங்கள் மீதான மோகத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

advertisement by google

Related Articles

Back to top button