தூத்துக்குடி செல்லம்விலாஸ் பழக்கடை உரிமையாளர் ராமசாமிநாடார் பந்தல்குடி அருகே கார்விபத்தில் பலி?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
தூத்துக்குடி செல்லம்விலாஸ் பழக்கடை உரிமையாளர் விபத்தில் பலி – பந்தல்குடி அருகே பரிதாபம்!
தூத்துக்குடி பிரபல தொழிலதிபர் ராமசாமிநாடார். இவருக்கு தூத்துக்குடியில் செல்லம்விலாஸ் என்கிற பெயரில் பழக்கடை இருக்கிறது. இவர், லயன்ஸ்கிளப் கவர்னராக இருந்து வந்தார்.
நேற்று கொள்முதல் சம்மந்தமாக வெளியில் சென்ற ராமசாமி, தனது பார்ச்சுனர் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காரை அவருடைய டிரைவர் ஓட்டினார். நள்ளிரவு 12 மணியளவில் கார் விருதுநகர்மாவட்டம், பந்தல்குடி பகுதிக்கு வந்தது. அப்போது எதிர்பாராவிதமாக நிலைதடுமாறி ரோட்டைவிட்டு கீழே இறங்கியது.
கார் விபத்து நடந்த சப்தம் கேட்டு பந்தல்குடி செக்போஸ்டில் நின்று கொண்டிருந்த போக்குவரத்து ஆய்வாளர் சரவணக்குமார், சிலருடன் அங்கே சென்றுபார்த்த போது, இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். பலத்த காயம் அடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ராமசாமி சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். மதுரை ஆஸ்பத்திரியில் டிரைவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டரான ஹரிகரன், ஏற்கனவே பணியாற்றிய தூத்துக்குடி மாவட்டத்துக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவம் நடந்த பகுதி தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி காவல்நிலைய எல்லை என்பதால், மாசார்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.??