மருத்துவம்

அதிக பலவீனமாகி தேறாத உடலையும் தேற்றும் தேற்றான் கொட்டை, எப்படி பயன்படுத்துவது?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

அதிக பலவீனமாகி தேறாத உடலையும் தேற்றும் தேற்றான் கொட்டை, எப்படி பயன்படுத்துவது?

advertisement by google

இப்போது போன்ற தண்ணீரை சுத்திகரிக்க மிஷினை நம்பவில்லை மக்கள். வீட்டினுள் கலங்கியிருக்கும் நீர் முதல் கண்மாய்களில் இருக்கும் நீரின் கலங்கல் வரை அதை தெளியவைக்க தேற்றான் கொட்டையை பயன்படுத்தினார்கள். அதோடு இவை பலவீனமான உடலை தேற்றுவதிலும் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

advertisement by google

தேற்றா மரத்தின் விதையே தேற்றான் கொட்டை என்றழைக்கப்படுகிறது. இந்த மரத்தின் கொட்டை தரும் எண்ணற்ற பயன்களால் இதை பெருமளவு உபயோகப்படுத்தியவர்கள் நம் முன்னோர்கள்.

advertisement by google

இன்றும் கூட பாரம்பரிய பழக்கத்தை கைவிடாமல் நீரை தெளிவாக்க நாட்டுமருந்துகடைகளில் கிடைக்கும் தேற்றான் கொட்டையை பயன்படுத்தி வருகிறார்கள் நம் முன்னோர்கள்.
இது குறித்த ஆய்வுகளிலும் தேற்றாங்கொட்டையில் இருக்கும் துகள்கள் பல்வேறு வேதிப்பொருள்களை உறிஞ்சு நீரை தெளிவாக்க உதவுவதாக கூறுகிறது. வெறும் நீரை உறிஞ்சி எடுக்க மட்டுமே தேற்றான் கொட்டை இல்லை. வேறு என்னவெல்லாம் நன்மை செய்கிறது என்றும் தெரிந்துகொள்வோம்.

advertisement by google

​தேற்றான் கொட்டை

advertisement by google

தேற்றான் மரம் பளபளப்பாகவும், கரும்பச்சை இலைகளையும் கொண்டிருக்கும் இதன் விதைகள் உருட்டையாக இருக்கும். இதனுடைய விதைகளும், பழங்களும் இரண்டுமே மருத்துவக்குணங்களை கொண்டிருக்க கூடியவை.

advertisement by google

தேற்றாங்கொட்டை கலங்கிய நீரை தெளிவாக்க உதவுவது போலவே தேறாத உடலை கொண்டவர்களையும் தேற்றுகிறது. இக்கொட்டையில் நச்சில்லா பொருள்கள் இருப்பதால் தைரியமாக பயன்படுத்தலாம். அதனால் தான் இயற்கை மருத்துவர்கள் தேற்றாங்கொட்டையிட்டுத் தேற்று மைந்தரை என்று சொல்வார்கள்.

advertisement by google

​தண்ணீரை தூய்மையாக்க

வீடுகளில் குடிநீரை தூய்மையாக்க தேற்றான் கொட்டையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

குடம் அல்லது பானையில் நீரை நிரப்பி மண், கலங்கல் என்று இருந்தாலும் அதை அப்படியே வைத்திருந்து கலங்கலை பிரித்து தெளிவாக வைக்கலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் தேற்றான் கொட்டையை பானையின் உட்புறமாக தேய்த்து நீர் நிரப்ப வேண்டும்.

சிறிது நேரம் கழித்து பார்த்தால் அழுக்குகளும் கலங்கலும் நீங்கி நீர் தெளிவாக இருக்கும். பழமை மாறாத பெரியவர்கள் இன்றும் குடிநீரை இந்த தேற்றான் கொட்டை தேய்த்து தூய்மையாக்கி குடிக்கிறார்கள்.

இவை நீரில் இருக்கும் உப்பு சுவையையும் இயன்ற அளவில் குறைத்து சுத்தமாகவும் ருசியாகவும் மணமாகவும் மாற்றிவிடும்.

​சிறுநீர் பிரச்சனை

சிறுநீர்த்தொற்று சிறுநீரகம் பிரிவதில் சிக்கல் என்பதை தாண்டி அடிக்கடி சிறுநீர் போகும் பிரச்சனையைக் கொண்டிருப்பவர்களுக்கு தேற்றான் கொட்டை சிறந்த கைவைத்தியமாக இருக்கும்.

தேற்றான் மரத்தின் பழங்கள் நாவல் போன்று இருந்தாலும் இதன் விதைகளே மருத்துவத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. நாட்டுமருந்து கடைகளில் தேற்றான் கொட்டை தூள் கிடைக்கும். கொட்டையும் தனியாக கிடைக்கும். இதை வாங்கியும் வீட்டில் பொடி தயார் செய்து வைத்து கொள்ளலாம்.

சிறுநீர் அடிக்கடி போகும் பிரச்சனை இருப்பவர்களுக்கு பசும்பாலை காய்ச்சி வெந்நீரில் கொதிக்க வைத்த இந்த தூளை அரைடீஸ்பூன் அளவு கலந்து கொடுத்தால் படிப்படியாக குணமாகும். நீர்ச்சுளுக்கு பிரச்சனைக்கு நல்ல மருந்தாக இருக்கும். சிறுநீரகக் கோளாறுகளையும் குணமாக்கும்.

​இனப்பெருக்க உறுப்பில் உண்டாகும் கோளாறுகள்

ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இனப்பெருக்க உறுப்பில் கோளாறுகள் உண்டாக வாய்ப்புண்டு. குறிப்பாக பால்வினை நோயால் உண்டாகும் புண்ணுக்கு மருந்தாக தேற்றான் கொட்டை சூரணம் உதவுகிறது.

ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிக்கவும் அவர்களது மெலிந்த உடலை தேற்றவும் தேற்றான் கொட்டை உதவுகிறது. இதற்கென பிரத்யேகமாக தேற்றான் கொட்டை லேகியம் தயாரிக்கப்படுகிறது.

​மெலிந்த உடல் தேறிவர

இந்த தூளுடன் திரிகடுகு தூள், திரிபலா தூள், சீரகத்தூள், சித்தரத்தை என நான்கும் கலந்து பசும்பால் விட்டு பசை போல் மைய அரைக்க வேண்டும். இதனுடன் சம அளவு நாட்டு வெல்லம் எடுத்து பாகு கலந்து அதனுடன் அரைத்த விழுதை கலக்க வேண்டும்.

இரண்டும் அல்வா பதத்துக்கு வர பசு நெய் விட்டு கிளறி கொண்டே இருக்க வேண்டும். அடுப்பு மிதமானத்தீயில் இருந்தால் போதும். கிளற கிளற நெய் பிரிந்து தனியாக வரும் போது சுத்தமான தேன் சேர்த்து வைக்கவும். தினமும் இரு வேளை நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் தேறும்.

​நீரிழிவுக்கு மருந்தாகும் தேற்றான் கொட்டை

நீரிழிவுக்கு எண்ணற்ற கைவைத்திய மருந்துகளில் தேற்றான் கொட்டையும் முக்கியமானது. இந்த கொட்டைகளை பாலில் ஊறவைத்து பிறகு அதை சுத்தமான நீரில் ஒருமுறை அலசி நிழலில் உலர்த்தி வைக்க வேண்டும்.

பிறகு இந்த கொட்டையை சுத்திகரிக்க நான்கு பங்கு கீரை சாறை (சிறு கீரை) விட்டு நெருப்பில் இட்டு எரித்தால் கிடைக்கும் கொட்டையை கழுவி எடுத்தால் கொட்டை சுத்தமாகும். பிறகு இதை பொடித்து வைத்துகொண்டு வெதுவெதுப்பான நீரில் குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

​கண்ணுக்கு மருந்து

கண்களில் அதிக உஷ்ணம் வரும் போது கண் கட்டி, கண் எரிச்சல், கண்களில் பீளை என்னும் அழுக்கு சேர்தல், கண்களில் நீர் வடிதல் பிரச்சனை உண்டாகக்கூடும். இதற்கு தேற்றான் கொட்டையை சுத்தம் செய்து அதனுடன் இந்துப்பு சேர்த்து மைய அரைத்து கண்களை சுற்றி பற்று போட வேண்டும்.

கண் வீக்கம், கண் நோய்க்கும் இந்த பற்று பலன் அளிக்கும். காயங்கள், புண்களின் மீதும் இந்த பற்று பலனளிக்கும். இவை தவிர சீதபேதி ஆகும் போது தேற்றான் கொட்டை பொடியை நீரில் கலந்து குடித்துவரலாம்.

பாரம்பரியமான வைத்தியத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு. மேற்கண்ட குறிப்புகள் முன்னோர்கள் கடைபிடித்து வந்தவை. இதை நீங்கள் முயற்சிக்கும் பொது உங்கள் இயற்கை மருத்துவரின் ஆலோசனையும் அவசியம்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button